15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு.. ! - 2 பேர் கைது..
ஆரணியில் கடந்த ஓரு மாதத்திற்கு முன்பு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சீதா (பெயர் மாற்றம்). இவருக்கு 15 வயதில் மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
மூத்த மகள் சீதாவிற்க்கு உதவியாக உள்ள நிலையில் இளைய மகளை அருகில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இந்நிலையில் மூத்த மகள் திடீரென காணாமல் போய் விட்டார்.
மூத்த மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சீதாவின் தோழி சித்ரா என்பவர் பாலியல் பலாத்காராத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
சுரேஷ் என்பவரும் மருத்துவர் ஜெயப்பிரகாஷ் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக சித்ராவும் கோட்டீஸ்வரி என்பவரும் செயல்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன சிறுமி வீடு வந்து சேர்ந்த நிலையில் சீதாவிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து சிதா போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
தகவலறிந்த போலீசார் மேற்கண்ட 4 பேரின் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இன்று சித்ரா மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.