Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை குத்தகைக்கு எடுத்த மழை…. 22 மாவட்ட மக்கள் உஷார்…!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tamilnadu weather today
Author
Chennai, First Published Oct 21, 2021, 8:21 AM IST

சென்னை: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tamilnadu weather today

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நீர்நிலைகளும் நிரம்பின.

இந் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tamilnadu weather today

மழை பெய்யும் எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர், திருச்சி

Tamilnadu weather today

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios