அப்பாடா…! கொஞ்சம் பரவாயில்லை… தமிழகத்தின் கொரோனா லேட்டஸ்ட் நிலவரம்…
தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1600க்கும் கீழாக குறைந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1600க்கும் கீழாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
தமிழகத்தில் 1,53,829 மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் 1597 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா 190 ஆக உயர்ந்திருக்கிறது. 1623 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 26,12,684 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலியாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 35,603 ஆக பதிவாகி உள்ளது. 25 பேரில் அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.
கோவையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 176ல் இருந்து 170 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 102, செங்கல்பட்டில் 111 ஆக கொரோனா தொற்று பதிவாகி இருக்கிறது.