கஷாயத்தில் விஷம் கலந்து இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Asianet TamilNews Live:கனமழை எதிரொலி.. புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Asianet TamilNews Live:கனமழை எதிரொலி.. புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03-11-2022) கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் அறிவித்துள்ளது. இதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
அந்தரங்க படங்கள் வெளியாக கூடாது.. அதனால் தான் கொன்றேன்! கேரளா இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்
வாளால் கேக் வெட்டிய பிரபல ரவுடி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !!
பிரபல ரவுடியும், பாஜக பிரமுகரான உடையார் என்பவர் பிறந்த நாளின் போது வாளால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்தான் உண்மையான பிளேபாய்! 87 திருமணங்களை செய்த நபர் - 88வது திருமணத்துக்கும் இப்போ ரெடி !!
இந்தோனேசியாவின் உள்ள மஜலெங்காவைச் சேர்ந்த 61 வயது முதியவர் 88வது திருமணத்தை செய்ய உள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி
கடந்த அதிமுக ஆட்சியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
தத்தளிக்கும் சென்னை!! கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் விடுத்த கோரிக்கை
சென்னையில் கனமழை பெய்து வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியில் சூப்பர் வேலை.. ஒரு மணி நேரத்தில் ரூ.1000 சம்பளம்.. விவரம் இதோ..
மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.மேலும் படிக்க
பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
நெல்லை பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பன் பாலம் மட்டுமா! ஆங்கிலேயர்கள் கட்டிய இந்தியாவின் டாப் 5 பாலங்கள் உங்களுக்கு தெரியுமா ?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் இன்னும் அதே உயிர்ப்புடன் நிற்கிறது. இவற்றுள் சில பாலங்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலானவை. அத்தகைய ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட டாப் 5 பாலங்களை இங்கு பார்க்கலாம்.
கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை
கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை
என்னையா கடிக்கிற.? நாகப்பாம்பை அசால்டா வளைத்து பிடித்து கடித்து கொன்ற சிறுவன்..
தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 350 கி.மீ தொலைவில் அமைந்து ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் பாஹடி கோர்வா என்று பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத வகையில் 200 வகையான பாம்புகள் காணபடுவதால், இந்த பகுதியை பாம்புகளின் இருப்பிடம் என்று அழைக்கின்றனர்.மேலும் படிக்க
குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!
குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணத்தை அரசு வழக்கறிஞர் குஜராத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை தொடருமா..? வெதர் அப்டேட்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மேலும் படிக்க
Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கார்த்தி தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி..! நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனையா..?
இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். அப்போது அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Meera Mithun: மீராமிதுன் படத்தை ஓட்ட இப்படி ஒரு பிளானா? அதிரடி முடிவெடுத்த படக்குழு..!
மீராமிதுன் பேயாக நடித்துள்ள, 'பேய காணோம்' திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ள... இந்த படத்தின் டிக்கெட்டில் தள்ளுபடி வழங்க அதிரடி முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். மேலும் படிக்க...
கழுவி கழுவி ஊற்றி விட்டு.. பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? உத்தமன் அண்ணாமலை கோமாளியா? BJP
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என அண்ணாமலை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
கந்தூரி சந்தனக்கூடு திருவிழா.. 45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.. முதலமைச்சர் அறிவிப்பு
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர், நாகூர் தர்கா தலைவர் ஆகியோரிடம் வழங்கினார்.மேலும் படிக்க
சென்னை டூ அந்தமான் செல்லக்கூடிய 14 விமானங்கள் வரும் 4 ஆம் தேதி வரை ரத்து
சென்னை டூ அந்தமான் செல்லக்கூடிய 14 விமானங்கள் வரும் 4 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் விமான நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்லது. மேலும் அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 7 விமானங்கள் மற்றும் அந்தமானிலிருந்து சென்னை வரும்7 விமானங்கள் என 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்னா வானத்தில் இருந்து வந்து குதித்த தேவ தூதன் என்கிற நினைப்போ.. பொன்முடிக்கு எதிராக பொங்கும் மநீம..!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களில் ஒருவரைப் பார்த்து "போடா மயிறு" என தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.