Asianet News TamilAsianet News Tamil

வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரர்… கத்தியால் குத்திய வாடிக்கையாளர்…

திருக்கழுக்குன்றம் அருகே வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Shop owner attacked
Author
Chengalpattu, First Published Oct 18, 2021, 9:13 AM IST

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Shop owner attacked

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் கடை ஒன்றில் வேலை செய்பவர் சுரேஷ். இந்த கடைக்கு பொருட்கள் வாங்க 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் பொருட்கள் வாங்கும் சமயத்தில் கடையின் பெண் ஊழியரை கேலி செய்ததாக தெரிகிறது.

இது தவிர வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமல் வம்பு பண்ணியதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உதவிக்காக அருகில் இருந்த கடைக்காரர்களை அழைத்துள்ளார்.

இதையறிந்த 5 பேரில் ஒருவர் சுரேஷை கத்தியால் கத்தி உள்ளார். அலறிக் கொண்டு அவர் கீழே விழ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட 5 பேரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.

Shop owner attacked

காயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். வாங்கிய பொருளுக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios