Asianet News TamilAsianet News Tamil

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - போலீஸ் எஸ்.ஐ செய்த காரியம்...! ரயில்வே போலீஸ் அதிரடி...!

Sexually harassed SI Was arrested.
Sexually harassed SI Was arrested.
Author
First Published Feb 2, 2018, 11:52 AM IST


சென்னை - கோவை ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார். 

சில நாட்களுக்கு முன்பு நீலகிரி விரைவு ரயிலில் பெண் ஒருவர் சென்னைக்கு பயணம் செய்தார். அப்போது ரயிலில் எஸ்.ஐ ஒருவரும் பயணம் செய்துள்ளார். 

தனியாக பயணம் செய்த அந்த பெண்ணிடம் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய போலீஸ் எஸ்.ஐ. அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்க முயன்றார் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்தார். 

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீஸ் எஸ்.ஐ என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசாரின் இந்த காரியம் வேலியே பயிரை மேய ஆசைப்பட்டது போன்று ஆகிவிட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios