8 மாவட்ட மக்களே உஷார்… இன்னிக்கு பிச்சு உதற போகும் கனமழை
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. கோவை, நீலகிரி, வேலூர், விழுப்புரம் என பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவையில் கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் பலத்த மழை கொட்டியது. சென்னையிலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பதிவாகி வருகிறது. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளிகளுக்கு செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந் நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.