Asianet News TamilAsianet News Tamil

14 மாவட்டங்களை இன்று ‘பஞ்சராக்கும்’ மழை… வானிலை மையம் வார்னிங்…

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain 14 districts today
Author
Chennai, First Published Oct 17, 2021, 8:50 AM IST

சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain 14 districts today

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. காஞ்சிபுரம், கரூர், கோவை, நீலகிரி என பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:

Rain 14 districts today

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் எதிரொலியாக  தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios