அக்.25…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம நியூஸ்….!
வரும் 25ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
வரும் 25ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய திரைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
2019ம் ஆண்டு இந்த தாதா சாகேப் பால்கே விருதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா காரணமாக விருது நிகழ்ச்சி நடைபெறாததால் ரஜினிகாந்த் விருதை பெற்றுக் கொள்ளவில்லை.
இந் நிலையில் வரும் 25ம் தேதி டெல்லியில் விழா ஒன்றில் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.
அதே நாளில் 2019ம் ஆண்டின் தேசிய விருதுகளும் அளிக்கப்பட உள்ளன. சிறந்த படத்துக்கான தேசிய விருது மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கன் என்ற படத்துக்கு வழங்கப்பட உள்ளது.
அசுரன் படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை விஜய் சேதுபதி பெறுகிறார்.