Asianet News TamilAsianet News Tamil

விபத்தில் படுகாயமடைந்தவர் கணவன் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த நர்ஸ்… இறந்ததை அறிந்து கதறி அழுத கொடுமை…

ஓமலூர்  அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்ளி அவசர சிக்சைக்காக் கொண்டு வரப்பட்டவர் தனது கணவன் என்று தெரியாமல் சிகிச்சை  அளித்த நர்ஸ், பின்னர் அவர் கணவர் என்பதை அறிந்து உடலைக் கட்டிப் பிடித்து  கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Nurse gave treatment her hasband but she dont know he is her husband
Author
Omalur, First Published Sep 24, 2018, 8:57 AM IST

சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியான இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இ்ந்தநிலையில் நேற்று சீனிவாசன் தனது மோட்டார் சைக்கிளில் தனது அக்காள் பூங்கோதையை அவரது வீட்டில் விடுவதற்காக புளியம்பட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை வீட்டில் விட்டு விட்டு அதே மோட்டார் சைக்கிளில் மேச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பச்சனம்பட்டி அருகே வந்த போது சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Nurse gave treatment her hasband but she dont know he is her husband

நேற்று வழக்கம் போல் சிவகாமி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்திருந்தார். பச்சனம்பட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருந்தனர்.

விபத்தில் சிக்கியவருக்கு டாக்டர்கள், நர்சுகள் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர்.அதில் நர்சு சிவகாமியும் ஒருவர். விபத்தில் சிக்கியவரின் முகத்திதல் இருந்த ரத்தகறையை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது விபத்தில் சிக்கியவரின் விரலில் தி.மு.க. சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதை பார்த்து சிவகாமி திடுக்கிட்டார். அது தன்னுடைய கணவரது மோதிரம் போல் இருக்கிறதே என சந்தேகம் அடைந்தார்.

பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்து இருந்ததால் அவரது தலையில் சுற்றி இருந்த துணிகளை அகற்றி முகத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் சிக்கியது தனது கணவர் சீனிவாசன் என்பதை அறிந்து கதறி அழுதார்.

Nurse gave treatment her hasband but she dont know he is her husband

அப்போது அங்கிருந்த டாக்டர்கள், விபத்தில் சிக்கிய சீனிவாசனை பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கணவரது உடலை கட்டிப்பிடித்து அவர் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios