10 , + ஒன் மற்றும் பிளஸ் – 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது! கல்வித்துறை அதிரடி ,,,,
அரையாண்டு தேர்வு விடுமுறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்க உள்ளதால் 10, +1, +2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறவுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் ஆணையிட்டுள்ளது.
தமிழக கல்வித்துறை மாணவர்களின் படிப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதுவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் நாளை மறுநாள் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. 23 ஆம்தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பத்தாம் வகுப்பு, பிளஸ் – 1. பிளஸ் – 2 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்க உள்ளதால் அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடைபெறவுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.