2 நாட்களுக்கு "டமால் டிமில் மழை"...! உஷார் மக்களே.... குடையை கூடவே வெச்சுக்கோங்க...!
2 நாட்களுக்கு "டமால் டிமில் மழை"...! உஷார் மக்களே.... குடையை கூடவே வெச்சுக்கோங்க...!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கு மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தற்போது கேரளா மற்றும் அதை சுற்றி மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும், தென் மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்து வருகிறது.