அரசு அலுவலக அலைச்சலுக்கு விடை: மக்கள் நலனில் முத்திரை பதிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்!

Share this Video

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், சென்னை அவசரக்கால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்த பின் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கும் மிகச்சிறந்த நிர்வாகப் புரட்சியாகும். பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல் போன்றவற்றுக்கு அரசு அலுவலகங்களை நாடி மாதக்கணக்கில் அலைந்த நிலையை மாற்றி, "இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் 5 நாட்களில் நடவடிக்கை" என அவர் அறிவித்திருப்பது டிஜிட்டல் நிர்வாகத்தின் உச்சக்கட்ட சாதனையாகும். மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான சாதி சான்றிதழ்கள் இனி உடனே கிடைக்க வழிவகை செய்துள்ளதும், பத்திரப்பதிவில் உள்ள தடைகளை நீக்கி பட்டா மாறுதலுக்கான காலதாமதத்தைத் தவிர்த்துள்ளதும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நிம்மதியாகும். அரசு நிலங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு, பேரிடர் மேலாண்மைத் தயார்நிலையை ஆய்வு செய்துகொண்டே மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் மிக வேக தீர்வை வழங்கியுள்ள அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் இந்த அதிரடி மக்கள் நலச் சீர்திருத்தங்களும், தொலைநோக்குடன் கூடிய களப்பணியும் மனதாரப் பாராட்டத்தக்கவை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video