Asianet News TamilAsianet News Tamil

திருமணம் செய்ய இருந்த காதலியை கற்பழித்து கொன்ற காதலன்...! வெளியான பகீர் காரணம்...!

lover sexually abused and killed her lover
lover sexually abused and killed her lover
Author
First Published May 16, 2018, 4:52 PM IST


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, விஜயகுமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த சில வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் திடீர் என விஜயகுமார் திவ்யாவை கற்பழித்து, கிணற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 விஜயகுமார் மற்றும் திவ்யா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு ஜாதகம் ஒற்று போகவில்லை என மறுப்பு தெரிவித்த பெற்றோர். பின் இவர்கள் காதலில் உறுதியாக இருப்பதை பார்த்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இவர்கள் திருமணம் வரும் 20ஆம் தேதி நடைபெற இருந்தது.

 lover sexually abused and killed her lover

இந்நிலையில், தீடீர் என தான் காதலித்து, கரம் பிடிக்க இருந்த திவ்யாவை கொலை செய்துள்ளார் விஜயகுமார்.

இந்த சம்பவம் குறித்து அனைவரிடமும் விசாரணை நடித்திய போலீசார், விஜயகுமாரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக இவர் பதிலளித்ததால் இவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை தொடந்து தீவிரமாக விசாரணை நடத்த துவங்கினர். lover sexually abused and killed her lover

பின் விஜயகுமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் போலீசாரிடம் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் திவ்யாவிற்கு பரிசாக ஒரு செல் போன் வாங்கிக்கொடுத்ததாகவும். இதையடுத்து திவ்யாவின் செல்போனுக்கு தொடர்புக்கொண்டபோது... அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, உறவினரிடம் பேசியதாக கூறினார். மேலும் அவரின் நடத்தையின் மீதும் தனக்கு சந்தேகம் ஏற்பட்டது.lover sexually abused and killed her lover

இதனால் இரவு 11 மணியளவில் திவ்யாவை செல்போனில், தொடர்புக் கொண்டு, தனிமையில் பேச வேண்டும் கூறி அழைத்தேன், அவரும் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இருவரும் அருகில் உள்ள விளை நிலத்திற்கு சென்றோம்... அங்கு இருள் சூழ்ந்து இருந்ததால், அவரை தனிமையில் இருக்குமாறு கூறினேன் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஒரு நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் ஆத்திரத்தில் அவருடைய கன்னத்தில் அறைந்தேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை கற்பழித்தேன்... பின் அருகில் இருந்த கிணற்றில் தள்ளினேன், இதனால் தண்ணீரில் மூழ்கி திவ்யா மரணமடைந்ததாக கூறியுள்ளார். இதனால் போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios