Asianet News TamilAsianet News Tamil

தொடரும் லாக்கப் மரணம்... 2 உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்... சேலத்தில் பரபரப்பு!!

சினிமாபட பாணியில் சேலத்தில் நிகழ்ந்துள்ள லாக்கப் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

lockup death in salem 2 assistant inspectors suspended
Author
Salem, First Published Jan 16, 2022, 4:13 PM IST

சினிமாபட பாணியில் சேலத்தில் நிகழ்ந்துள்ள லாக்கப் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் துறையினர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். 12 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்தார். இதற்கு காவல்துறை துன்புறுத்தலே காரணம் எனக்கூறி சம்பந்தப்பட்ட காவல்துறை மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

lockup death in salem 2 assistant inspectors suspended

கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரத் குமார் மற்றும் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் இறந்தவரின் மனைவி மற்றும் பலர் பங்கேற்றனர். அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அரசு வேலை காவல்துறை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இறந்த பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

lockup death in salem 2 assistant inspectors suspended

இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. 
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் சூப்பிரண்ட் பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவலர் குழந்தைவேல் புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம்  சரக டிஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து , நீண்ட நாட்களாக உடலை வாங்க மறுத்த பிரபாகரனின் உறவினர்கள் இன்று உயிரிழந்த  பிரபாகரனின் உடலை பெற்றுச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios