தஞ்சையில் கடத்தப்பட்ட குழந்தை… 30 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்.. ஒரு சபாஷ் சேஸிங்…
தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டை பையில் கடத்தி செல்லப்பட்ட பச்சிளம்குழந்தை 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டை பையில் கடத்தி செல்லப்பட்ட பச்சிளம்குழந்தை 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியான தமது மனைவி ராஜலட்சுமியை பிரசவத்திற்காக குணசேகரன் என்பவர் சேர்த்திருந்தார். இந்த தம்பதிக்கு 4 நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த தம்பதிக்கு உதவுவது போல நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் குழந்தையை கட்டை பையில் வைத்து கடத்தி சென்றார். அவரது கடத்தல் கைங்கர்யம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. அங்கிருந்து வெளியேறியவர் நேராக ஆட்டோ ஒன்றில் ஏறி செல்வதும் தெரிய வந்தது.
புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். தனிப்படையை அமைக்கப்பட்டு அந்த பெண்ணின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும், ஆட்டோ செல்லும் பாதையை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அந்த குழந்தையை போலீசார் பட்டுகோட்டையில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்