ஐ.டி. பெண் ஊழியர் தற்கொலை...! காதல் விவகாரம் காரணமா?
ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பிரியங்கா (24) என்பவர் வேலை பார்த்து வந்தார். ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், நேற்று
பணியை முடித்து விட்டு, நேற்று மாலை, அந்த நிறுவனத்தின் 9-வது மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது, பிரியங்கா திடீரென 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியங்கா தற்கொலை செய்தது குறித்து, ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகள் இறந்த தகவலை கேட்ட தாயும்
தந்தையும் சென்னை விரைந்துள்ளனர்.
பிரியங்காவின் தற்கொலை குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், அவர் பணியாற்றிய ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியங்காவின் மரணத்துக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது உயர் அதிகாரிகளின் டார்ச்சரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். பிரியங்கா தற்கொலை செய்த சம்பவம் ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.