Asianet News TamilAsianet News Tamil

டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்திய 65 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்… ரூம் எடுத்து உல்லாசம்…

பஞ்சாபைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 20 வயது மாணவியை கடத்தி திருமணம்  செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ராமேஸ்வரத்தில் ரூம் எடுத்து உல்லாசமாக  இருந்தபோது போலீசார் கைது செய்தனர்.

illegal contact master and student
Author
Rameswaram, First Published Sep 26, 2018, 7:32 PM IST

பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் . 65 வயதான அவர்  பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த மகத்  என்ற 20 வயது  கல்லூரி மாணவி டியூசன் படித்துவந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென்று மாயமாகிவிட்டனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை போலீசாரிடம் புகார் செய்தார். அதில், தனது மகளை ஜெய்கிருஷ்ணன் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். இருவரையும் தீவிரமாக தேடி வந்த பஞ்சாப் போலீசார், இதுதொடர்பாக அனைத்து பகுதிக்கும் தகவல் கொடுத்தனர்.இதற்கிடையில் அவர்கள் ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது  செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.  இதையடுத்து ராமேசுவரம் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெயகிருஷ்ணன் பரபரப்பான தகவல்களைத் தெரிவித்தார். ஜெய்கிருஷ்ணனுக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் படித்துவந்தார். அப்போது மாணவி மீது பிரியமாக இருப்பதாக கூறி ஜெய்கிருஷ்ணன் சில உதவிகளை செய்துகொடுத்தார்.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார். இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.

illegal contact master and student

ஜெய்கிருஷ்ணனுக்கு ஓய்வூதியமாக மாதம் .25 ஆயிரம் ரூபாய் வந்ததும்  இருவரும் ஜாலியாக வெளியே சென்றுவருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படி இந்த மாதம் பணம் கிடைத்ததும் கடந்த 11–ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினர். முதலில் டெல்லி சென்று சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து பல இடங்களுக்கு சென்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்து தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேசுவரத்தில் இருப்பது தெரியவந்தது. பஞ்சாப் போலீசாரின் தகவலை தொடர்ந்து ராமேசுவரம் போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.

பஞ்சாப் போலீசார் மகத்தின் தந்தையுடன் ராமேசுவரம் வந்தனர். அப்போது, தானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்  அவர்கள் இருவரையும் பஞ்சாப் போலீசாருடன் அனுப்பி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios