இல்லத்தரசிகள் தலையில் ‘இடி’… பெட்ரோலை தொடர்ந்து ‘இதன்’ விலையும் உயர்வு
சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரித்துள்ளது, இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.
சென்னை: சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரித்துள்ளது, இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது, இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.
செப்டம்பர் மாதம் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விலை உயர்வின் காரணமாக சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 காசுகளாக உள்ளது. விரைவில் இதன் விலை 1000 ரூபாயை எட்டிவிடுமோ என்று அச்சத்திலும், கலக்கத்திலும் இல்லத்தரசிகள் இருக்கின்றனர்.