கணவன், மனைவி இருவருடனும் பாலியல் உறவு… இடைஞ்சலாக இருந்த கணவனைப் போட்டுத் தள்ளிய கள்ளக்காதலன்… கல்லூரி மாணவனின் வெறிச்செயல் !!
செக்ஸ் வைத்துக் கொள்ள இடையூறாக இருந்த கணவனை, அவரது மனைவியும், கள்ளக் காதலனும் சேர்ந்து போட்டுத் தள்ளிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ராமனுக்கு அனிதா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.. ராமனிடம் ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் ராமனுக்கு விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற கல்லூரி மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். ராமன் வீட்டுக்கு சந்தோஷ்குமார் அடிக்கடி வந்துபோய் இருந்துள்ளார்.
இதையடுத்து சந்தோஷ்குமாருக்கும், ராமனின் மனைவி அனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக் காதலாக மாறியது. ராமன் இல்லாத சமயங்களில் சந்தோஷ்குமார் மணப்பாக்கம் வந்து அனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார், கடந்த ஓராண்டாகவே சந்தோஷ்குமார் , ராமனுடனும் அவரது மனைவி அனிதாவுடனும் பாலியல் உறவு வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி, பணிக்கன்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ராமன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ராமனின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் சந்தோஷ்குமாருடன் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சந்தோஷ்குமாரை பிடித்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.. ராமன், அனிதா இருவரிடமும் உறவு வைத்திருந்த சந்தோஷ்குமாருக்கு ஒரு கட்டத்தில் ராமனுடனான உறவு பிடிக்காமல் போனது. ஓரினச் சேர்க்கைக்கு அவர் மறுத்ததால் ராமன் அவரை மிரட்டி உறவு கொண்டுள்ளார். இது குறித்து சந்தோஷ்குமார், அனிதாவிடம் கூறி அழுதுள்ளார்.
இந்நிலையில் அனிதாவும், சந்தோஷ்குமாரும் ராமனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். கடந்த 14-ந்தேதி ராமன் போன் செய்து சந்தோஷ்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
அப்போது, மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து சந்தோஷ் எடுத்து சென்றார். பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்பில் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்,
பின்னர் தூக்க மாத்திரை கலந்த மதுவை ராமன் குடித்துள்ளார். குடித்து முடித்த, சிறிது நேரத்தில் ராமன் மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவரது லுங்கியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து சந்தோஷ் தப்பி சென்றார்.
இதையடுத்து சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராமனின் மனைவி அனிதாவையும் , சந்தோஷ் குமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.