Asianet News TamilAsianet News Tamil

அடுத்த சில மணி நேரங்கள்… சென்னை மக்களே.. தயாராகி கொள்ளுங்கள்.. வானிலை அறிவிப்பு

அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai rain may continue
Author
Chennai, First Published Sep 22, 2021, 8:37 AM IST

சென்னை: அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai rain may continue

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தள்ளியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அடுத்துவரக்கூடிய நாட்களில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருந்தது. அதன்படி சென்னையில் நேற்றிரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.

அதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல ஓடியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துக்கு ஆளாகினர்.

Chennai rain may continue

இந் நிலையில் சென்னையில் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மட்டுல்லாது காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios