Asianet News TamilAsianet News Tamil

தோண்ட தோண்ட சிலைகளும்... பழமை வாய்ந்த தூண்டுகளும்... அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள கிரண் ராவ் என்பவரது வீட்டிலிருந்து புதைக்கப்பட்ட 23 கல் தூண்கள் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை கண்டு சிலை தடுப்புப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள கிரண் ராவ் என்பவரது வீட்டிலிருந்து புதைக்கப்பட்ட 23 கல் தூண்கள் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை கண்டு சிலை தடுப்புப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான சைதாப்பேட்டை, தஞ்சாவூர், படப்பை உள்ளிட்ட இடங்களில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 400-க்கும் அதிகமான பழங்கால கற்தூண்கள் மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து ரன்வீர் ஷாவின் நண்பர் கிரண் ராவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 சிலை உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் சமீபத்தில்தான் புதைக்கப்பட்டியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Video Top Stories