Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பியை அலறவிட்ட புல்லட் நாகராஜ்! அதிகலங்க வைக்கும் ஆடியோ மெசேஜ் இதோ!

பெண் எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி என் ஜெயில் அனுபவம் உன் வயசு என்று கூறி பெண் எஸ்.பி. ஒருவருக்கு ரவுடி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

bullet nagaraj warning sp
Author
Chennai, First Published Sep 7, 2018, 5:18 PM IST

பெண் எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி என் ஜெயில் அனுபவம் உன் வயசு என்று கூறி பெண் எஸ்.பி. ஒருவருக்கு ரவுடி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி புல்லட் நாகராஜ். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புல்லட் நாகராஜனின் அண்ணன், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்த நிலையில், புல்லட் நாகராஜனின் அண்ணன், அதிக தூக்க மாத்திரைகளை கேட்டு சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.  சிறையில் வழக்கமான மருத்து வள சோதனையின்போது, பெண் டாக்டரிடம் தனக்கு அதிக தூக்க மாத்திரைகள் தரும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அந்த டாடக்டர் மறுத்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரவுடி, டாக்டரை தாக்க முற்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து எஸ்.பி. ஊர்மிளாவிடம், டாக்டர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ரவுடியை அடித்து உதைத்ததாக தெரிகிறது. 

இந்த சம்பவத்துக்குப் பிறகு, புல்லட் நாகராஜனின் அண்ணன், நன்னடத்தை விதி காரணமாக விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த அவர், புல்லட் நாகராஜனிடம், இது குறித்து தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளா மற்றும் குறிப்பிட்ட மருத்துவருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.  அதில், தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயிலே கிடையாது. இனிமே புதுசா கட்டினாத்தான் உண்டு. மதுரை ஜெயிலைப் பொறுத்தவரை உனக்கு நிர்வாகத் திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சிருக்கியா? உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்துக்காக ஜெயிலர் ஜெயப்பிரகாசை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கா? உன்னைவிட பெரிய ஆபிசர் எல்லாம் நான் பாத்திருக்கேன். நீயெல்லாம் டி.என்.பி.எஸ்.சி. எழுதி நேத்து வந்தவ. என் ஜெயில் அனுபவம் உன் வயது. ஆனா, யாரா இருந்தாலும் ஜெயில் கேட்ட விட்டு வெளியே வந்துதானே ஆகணும். நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா பசங்க ஏதாச்சும் பண்ணுனா... அதுக்கு நான் பொறுப்பில்ல... பொம்பளையா இருக்கீங்க... திருந்துங்க... என்று அந்த வாட்ஸ் அப் ஆடியோவில் பேசியுள்ளார்.

 இது குறித்து பேசிய எஸ்.பி. ஊர்மிளா கூறும்போது, ரவுடி நாகராஜை நான் பார்த்ததுகூட இல்லை. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios