Asianet News TamilAsianet News Tamil

கடைசி நொடியில் சுயரூபத்தை காட்டி மிரளவைத்த அத்திவரதர்...! போதும்... இதைவிட வேறு என்ன வேண்டும்...! பரவசத்தில் பக்தர்கள்...!

குளத்தில் சிலை வைக்கப்படும் போது தவறாமல் மழை வரும் என்பது ஐதீகம். அதேபோல் சயன கோலத்தில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்ட உடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மலை பிரகாரம், ஆளவந்தார் பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீரால் அனந்தசரஸ் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. 

athivaradhar last minits
Author
Kanchipuram, First Published Aug 19, 2019, 8:35 AM IST

பக்தர்கள் எதிர்பார்த்தபடியே அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. அத்திவரதரின் சக்திக்கு இது ஒன்றே சாட்சி என பக்தர்கள் பரவசமடைந்து வருகின்றனர்.athivaradhar last minits

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் நிறைவடைந்து , மீண்டும் அத்திவரதர் சிலை  அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது, குளத்தில் சிலை வைக்கப்படும் போது தவறாமல் மழை வரும் என்பது ஐதீகம். அதேபோல் சயன கோலத்தில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்ட உடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மலை பிரகாரம், ஆளவந்தார் பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீரால் அனந்தசரஸ் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. athivaradhar last minits

அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் போது மழை வந்து குளம் நிரம்பும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், ஆமாம் குடிக்கவே தண்ணீர் இல்லை இதில் வேறு மழைவந்து குளம் நிரம்பபோகிறதாம்...! என்று அத்தியை மிக சாதாரனமாக சிலர்  விமர்சித்து வந்த நிலையில் அத்திவரதர் வைபவ ஐதீகப்படியே தற்போது மழை வந்து  அனந்தசரஸ் குளம் நிரம்பியுள்ளது, பக்தர்கள் எதிர்பார்த்தபடியே அனைத்தையும் நடத்திக்காட்டி அத்திவரதர் தன் பவர் என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார் என்றும், அத்திவரதரின் சக்தியை  எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்துவருகின்றனர். இனி 41 ஆண்டுகளக்கு பின்னரே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், அத்திவரதரை நேரில் தரிசித்தவர்கள் அப்பாடா அத்திவரதரை பார்த்துவிட்டோம் என்ற நிம்மதி பெருமூச்சுடன், இது ஒன்றே என் வாழ்க்கைக்கு போதும் ,இனி என்ன நடந்தாலும் என்னை  அத்திவரதர் பார்த்துக்கொள்வார் என்று அத்திவரதரின் மீது தங்களுக்கு ஏற்பட்டுள்ள அளவு கடந்த நம்பிக்கையும் பக்தியும் வெளிபடுத்திவருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios