Asianet News TamilAsianet News Tamil

பல மாதங்களாக செக்ஸ் சில்மிஷம் செய்து வந்த கணவரின் அண்ணன்... விரக்தியில் இளம் பெண்ணின் விபரீத முடிவு...

A woman suicide sexual harassment
A woman suicide sexual harassment
Author
First Published May 30, 2018, 7:34 PM IST


கணவரின் அண்ணன் பல மாதங்களாக தொடர்ந்து  செக்ஸ் சில்மிஷம் செய்ததால். மனமுடைந்த அந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராம்குமார் திருமணம் ஆகி 15 ஆண்டு ஆகிறது. இவர் கூலி வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். 

இதனால் அவருடைய மனைவி மட்டும் வீட்டில் இருப்பார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூலித்தொழிலாளியின் அண்ணன் சுந்தரகுமரன் தனது தம்பியின் வீட்டுக்கு வந்து தம்பியின் மனைவி வனிதாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் பலமுறை உங்கள் அண்ணன் என்னிடம் தப்பாக நடக்க பார்க்கிறார். தயவு செய்து அவரை என்னன்னு கொஞ்சம் கேளுங்கள் என சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து தனது மனைவியை சமாதானம் செய்த ராம்குமார். தனது அண்ணனிடம் தனது மனைவியை இப்படியெல்லாம் தொல்லை தரவேண்டாம் என கெஞ்சியிருக்கிறார்.  அதன் பின்னரும் கணவரின் அண்ணன் பாலியல் தொந்தரவு தொடர்ந்ததுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிய அந்த பெண் வீட்டில் இருந்த ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, நேற்று மாலை வேலைக்கு சென்று வீடு திரும்பிய அந்த பெண்ணின் கணவர் ராம்குமார் வந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கத்தியததால் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

பின்னர், தகவலறிந்த அரூர் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து கணவரின் அண்ணன் சுந்தரகுமரனை கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios