Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் பரபரப்பு...! ஓரினசேர்க்கைக்கு இணங்க மறுத்த வாலிபரை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை...!

a man killed a person for gay relationship in chennai
a man killed a person for gay relationship in chennai
Author
First Published Jun 9, 2018, 5:59 PM IST


ஓரினச்சேர்க்கையில் துணையாக இருந்தவரைக் கொன்று, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த சரவணன். இவருக்கு வயது 30, நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பிரபு. இவருக்கு வயது 28.

இவர்கள் இருவரம்ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். மற்றும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

a man killed a person for gay relationship in chennai

சென்னை ரிட்சி தெருவில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் பணிபுரிந்து வந்த இவர்களுக்கு இடையே நாளடைவில் ஓரினசேர்க்கை பழக்கம்  வந்துள்ளது.ஒரு  கட்டத்தில்  இந்த  விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது. பின்னர்  அவர்களும் கண்டித்து உள்ளனர்.

பிறகு சில  நாட்களாக ஓரின சேர்கையில் ஈடுபடாமல் இருந்த இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இரவு, பிரபு கடையில் இருந்துள்ளார். அங்கு வந்த சரவணன், பிரபுவை வெளியே அழைத்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

a man killed a person for gay relationship in chennai

பின்னர் கடையினுள் சென்ற இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்து உள்ளது

அதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தும், மற்றொருவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சரவணனின் பேச்சுக்கு இணங்க மறுத்த பிரபுவை அவரே அடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை  செய்துகொண்டதும் அம்பலமாகி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios