பாலியல் புகார் கடிதத்தில் திடுக்கிடும் தகவல்..! அமைச்சரே என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்..?!
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி மருத்துமனையில் முதுநிலை மாணவிகள் 3 பேரிடம் பாலியல் அத்து மீறல் நடந்து உள்ளதாக மருத்துவர்கள் கார்த்திகேயன், ரோஷன் மற்றும் புகாரை கண்டுகொல்லம் கிடப்பில் போட்ட சூப்பிரண்டு விஜயா ஆகியோர் மீது குற்றசாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரிக்கும் போது மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்.
மேலும், அவருக்கு கிடைத்த கடிதம் பாலியல் புகார் கடிதம் அல்ல அது வெறும் மொட்டை கடுதாசி என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மூன்று மாணவிகளின் கையெழுத்து போட்டு,பாலியல் குறித்த புகாரை மாணவிகள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்த நகல் வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன
சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது
கர்ப்பத்தை கலைக்க மூன்று மருத்துவர்களை பயன்படுத்தியதாகவும் புகார்
அமைச்சர் தனது கட்டுபாட்டில் உள்ளதாக, சூப்பிரண்டு விஜயா மாணவிகளை மிரட்டியதாகவும்
மேலும், இரு மருத்துவர்களின் பாலியல் வன்புணர்வால் ஒருமாணவி கர்ப்பம் ஆகி உள்ளதும் தெரியவந்து உள்ளது
மேலும் பாலியல் குற்றத்திற்காகவே தனி அறை உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப் பட்டு உள்ளது.