Asianet News TamilAsianet News Tamil

சும்மா பிச்சு வாங்குது மழை… இந்த மாவட்ட பள்ளிகளுக்கெல்லாம் நாளைக்கு லீவு !!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை  பெய்து வருவதால் சென்னை . காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
 

8 dist school leave due to rain
Author
Chennai, First Published Dec 1, 2019, 10:11 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

ஆனால் திடீரென வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

8 dist school leave due to rain

இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்  நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

8 dist school leave due to rain

இதையடுத்து தொடர் கனமழையால் சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  ஆகிய 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

Follow Us:
Download App:
  • android
  • ios