Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு நெத்தியடி கொடுத்த கடலூர்காரர்கள்..! 5 லிட்டர் பெட்ரோலை மொய் கொடுத்து கிண்டல்..!

மோடிக்கு நெத்தியடி கொடுத்த க டலூர்காரர்கள்..! 5 லிட்டர் பெட்ரோலைமொய் கொடுத்து கிண்டல்..!

5 litre petrol gifted to newly married couple and created awarness among people
Author
Chennai, First Published Sep 16, 2018, 5:14 PM IST

பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தாலும், பால், முட்டை,காய்கறிகள், பழங்களும் விலை உயர்ந்து வருவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையைக்குறைக்கக் கோரி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

5 litre petrol gifted to newly married couple and created awarness among people

பெட்ரோல் - டீசல் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறது.விண்ணை முட்டும் விலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மணமக்களுக்கு மொய் பணமாக 5 லிட்டர் பெட்ரோல் கொடுக்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன் - கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. 

5 litre petrol gifted to newly married couple and created awarness among people

திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்களின் உற்றார் உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வரவேற்பு விழாவுக்கு வந்தவர்கள், புதுமண தம்பதியருக்கு கிப்ட் கொடுத்தும், வாழ்த்துகள் கூறியும் வந்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios