Asianet News TamilAsianet News Tamil

தஞ்சையில் திடீர் பதற்றம்… மோதிக் கொண்ட இரு சமூகம்…. 144 தடை உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில் திடீரென 2 சமூகத்தினர் இடையே எழுந்த பிரச்சனை காரணமாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

144 order tanjore
Author
Thanjavur, First Published Oct 21, 2021, 9:03 AM IST

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் திடீரென 2 சமூகத்தினர் இடையே எழுந்த பிரச்சனை காரணமாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

144 order tanjore

தஞ்சை மாவட்டத்தில் உள்ளது கபிஸ்தலம். இந்த பகுதியில் 2 சமூக மக்கள் இடையே நேற்று திடீரென பிரச்னை மூண்டது. பின்னர் இந்த பிரச்னை மோதலாக மாறியது. இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இரு தரப்பினர் இடையேயும் சமாதானம் பேச முயன்றனர்.

அப்போது போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந் நிலையில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுக்காத வண்ணம், 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. 2 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

144 order tanjore

144 தடை உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை 144 தடை அமலில் இருக்கும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios