12 வயது சிறுமியை பலமுறை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் !! போக்ஸோ சட்டத்தில் கைது !!
சென்னை திருமங்கலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி பல முறை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பாடி புது நகர் 4 வது தெருவைச் சேர்ந்தவர் சுமதி. அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அவர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையை பிரிந்து வாழும் இவரது அம்மா நகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று திடீரென சுமதிக்கு உடல்நிலை சரியில்லை பாதிக்கபபட்டது. இதையடுத்து சுமதியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துப் சென்றார். சுமதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சுமதியின் தாயார் திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாடி புதுநகர் 3 வது தெருவில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி என்கிற பெருமாள் சுமதியை பலமுறை மிரட்டி கற்பழித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரவியை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர் ரவிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும், வீட்டின் அருகே விளையாட வரும் அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்ததை ஒப்புகொண்டுள்ளான்.
ஒரு திருமணமான ஆண் தன் மகள் வயது சிறுமியை தொடர்ந்து மிரட்டி கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.