Asianet News TamilAsianet News Tamil

காதல் மனைவியை விட்டுவிட்டு திருநங்கையுடன் 3 ஆண்டுகளாக கும்மாளம்... டிக் டாக்கில் சிக்கிய கணவர்..!

காதல் மனைவியை விட்டுவிட்டு 3 ஆண்டுகளாக திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்த கணவரை டிக் டாக் வீடியோ மூலம் மனைவி கண்டுபிடித்துள்ளார். 

tik tok video...husband catched
Author
Tamil Nadu, First Published Jul 2, 2019, 2:35 PM IST

காதல் மனைவியை விட்டுவிட்டு 3 ஆண்டுகளாக திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்த கணவரை டிக் டாக் வீடியோ மூலம் மனைவி கண்டுபிடித்துள்ளார். 

விழுப்புரம் அடுத்து வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2013-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. கணவரை பல இடங்களில் தேடிய கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஜெயப்பிரதா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 tik tok video...husband catched

கடந்த 3 ஆண்டுகளாக சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டிக் டாக் வலைதளத்தில் காணாமல் போன சுரேஷ் போன்ற நபர் திருநங்கையுடன் ஜோடியாக ஆடிப்பாடும் வீடியோக்கள் வெளியானது. இதைக் கண்ட ஜெயப்பிரதாவின் உறவினர்கள் உனது கணவன் திருநங்கை ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான ஆதாரமாக அந்த வீடியோவையும் அவரிடம் காட்டினர். tik tok video...husband catched

அந்த வீடியோவை பார்த்தவர், டிக் டாக்கில் இருப்பது கணவர் சுரேஷ்தான் என்று கூறினார். உடனே இந்த தகவலை காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, விழுப்புரத்தைச் சேர்ந்த திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த பொழுது டிக் டாக் வீடியோவில் சுரேஷுடன் இருப்பது ஓசூரை சேர்ந்த திருநங்கை என்பதை கண்டறிந்தனர். அதன் பிறகு ஓசூருக்கு நேரில் சென்று  விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. tik tok video...husband catched

இதனையடுத்து சுரேஷ் மீட்டு வந்த காவல்துறையினர் அவரை மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர். தொடர்ந்து சுரேசிடம் விசாரணை செய்ததில் தான் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு, திருநங்கையுடன் குடும்பம் நடத்துவதாக கூறி டிக்டாக்கில் கூத்தடித்து வந்தவர், காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios