Asianet News TamilAsianet News Tamil

வாயில் மனித கழிவை திணித்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ்... அரசு அதிரடி..!

திருவாரூரில் வாயில் மனித கழிவுகளை திணித்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சக்திவேல் என்பரை மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

dalit issue... 3 people arrested
Author
Tamil Nadu, First Published May 16, 2019, 5:43 PM IST

திருவாரூரில் வாயில் மனித கழிவுகளை திணித்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சக்திவேல் என்பரை மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவாண்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லிமலை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான இவருக்கும்- ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமாருக்கும், கோவில் திருவிழாவின் போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி, கொல்லிமலையை அவர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, மலம் உண்ண திணித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. dalit issue... 3 people arrested

இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய காவல்துறையினர் சாதிய வன்கொடுமை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 dalit issue... 3 people arrested

இந்நிலையில் இந்தப் புகாரில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கேட்டிருந்தது. இந்நிலையில் சக்திவேல் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios