Asianet News TamilAsianet News Tamil

மின்சார கம்பியை மிதித்த மருமகள் .. காப்பாற்ற சென்ற மாமியாரும் சேர்ந்து பலியான சோகம் .. உயிர் தப்பிய பிஞ்சு குழந்தைகள் ..

மின்சார கம்பியை மிதித்த மருமகளை காப்பாற்ற சென்ற மாமியாரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
 

two women died due to electric shock
Author
Tamil Nadu, First Published Aug 20, 2019, 1:34 PM IST

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மனைவி சரண்யா . இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும் , 8 மாதத்தில் பெண் குழந்தையும் இருக்கிறது . லட்சுமணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் . லட்சுமணன் தாயார் தெய்வானை  , சரண்யாவிற்கு துணையாக அவர் வீட்டில் வசித்து வருகிறார் .

two women died due to electric shock

இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது . சரண்யா வீட்டின் பின்புறம் ஒரு மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது . இதனை அறியாத சரண்யா , மழை நேரத்தில் அதனை மிதித்து விட்டார் . இதனால் மின்சாரம் தாக்கி அலறியுள்ளார் .

சத்தம் கேட்டு வீட்டில் இருந்து தெய்வானை வெளியே வந்துள்ளார் . காப்பாற்றுவதற்கு அருகே சென்ற போது அவரையும் மின்சாரம் தாக்கி இருக்கிறது . இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் .

two women died due to electric shock

அருகில் நின்ற குழந்தைகளுக்கு சிறு காயம் ஏற்பட்டது . அவர்களை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios