Asianet News TamilAsianet News Tamil

கொடுத்த கடனை திருப்பி தராததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

family suicide
Author
Tamil Nadu, First Published Apr 2, 2019, 6:16 PM IST

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் குகை பகுதியில் மனைவி, மகனுடன் வசித்து வந்த சிவராமன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள். ஒருவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மற்றொருவர் மனவளர்ச்சி குன்றிய மகனை பாதுகாத்து வந்தனர். மேலும் சிவராமன் அருகாமையில் உள்ள தெரிந்த நபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 family suicide

இந்நிலையில், வெளியில் கடன் கொடுத்த பணத்தை கேட்டபோது, திருப்பிக் கொடுக்க மறுத்தவர்கள், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனால், மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சொற்ப வருமானத்தில் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்ட நிலையில், 4 லட்ச ரூபாயை கடனாக பெற்ற உறவினர், 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

 family suicide

இதனையடுத்து நீண்ட நேரம் இன்று காலை கதவு திறக்கப்படாததைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில், மூன்று பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios