Asianet News TamilAsianet News Tamil

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு... மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ramanathapuram two months for 144 ban
Author
Tamil Nadu, First Published Sep 9, 2019, 12:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர் 1957-ம் ஆண்டுச் செப்டம்பர் 11-ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

ramanathapuram two months for 144 ban

இந்நிலையில், வரும் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு வருகை தரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

ramanathapuram two months for 144 ban

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்கம் குருபூஜை உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios