Asianet News TamilAsianet News Tamil

ஷேர் ஆட்டோவும்- லாரியும் நேருக்கு நேர் மோதல்... 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

மதுரையில் ஷேர் ஆட்டோவும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

madurai accident... 6 people kills
Author
Tamil Nadu, First Published Oct 25, 2019, 4:46 PM IST

மதுரையில் ஷேர் ஆட்டோவும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

madurai accident... 6 people kills

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் அபாயகரமான வளைவு ஒன்று உள்ளது. இந்நிலையில், உசிலம்பட்டியில் இருந்து எழுமலைக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுக்கொண்டிருந்தது. ஷேர் ஆட்டோ என்பது கோடாங்கம் நாங்குபட்டியலில் இருந்து 11 பயணிகளை ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டிக்கு வந்துக்கொண்டிருந்தது. அப்போது, அபாயகரமான வளைவில் திரும்பிய போது ஷேர் ஆட்டோவும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 

madurai accident... 6 people kills

இதுததொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios