Asianet News TamilAsianet News Tamil

8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!


வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
 

heavy rain for 8 districts
Author
Tamil Nadu, First Published Nov 22, 2019, 4:43 PM IST

தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை வந்தது. ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து உருவாகிய புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது.

heavy rain for 8 districts

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

heavy rain for 8 districts

இதனிடையே தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழையும், ஒரு சில  இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios