Asianet News TamilAsianet News Tamil

காதலியை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு... காதலர் தினத்தில் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள காளிதாஸ் நகரை சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் ஜான் கிறிஸ்டோபர் (29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறினார். ஆனால், பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால், அவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார். 

Parental opposition to love...young man suicide
Author
Coimbatore, First Published Feb 14, 2020, 5:37 PM IST

கோவை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Parental opposition to love...young man suicide

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள காளிதாஸ் நகரை சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் ஜான் கிறிஸ்டோபர் (29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறினார். ஆனால், பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால், அவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார். 

Parental opposition to love...young man suicide

இந்நிலையில், காதலர் தினத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஜான் கிறிஸ்டோபர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுது துடித்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios