Asianet News TamilAsianet News Tamil

மது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..! தேர்தல் ஆணையம் அதிரடி..!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Election result... TASMAC Holiday
Author
Tamil Nadu, First Published May 21, 2019, 3:44 PM IST

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதியன்று அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. Election result... TASMAC Holiday

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எந்த கலவரமும் நடைபெறாமல் இருக்க முன்னேச்சரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. Election result... TASMAC Holiday

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார். இதனால் மது பிரியர்கள் முன்னேச்சரிக்கையாக சரக்கு வாங்கி வைத்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios