Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அடுத்த கொரோனா பலி..!

சென்னையை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவர் அவதிப்படவே கொரோனா வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

corona death toll in tamilnadu raised to 5
Author
Tamilnádu, First Published Apr 5, 2020, 2:13 PM IST

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தற்போது தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு 300ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 5 ஆக அதிகரித்திருக்கிறது.

image

சென்னையை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவர் அவதிப்படவே கொரோனா வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 tamilnadu placed third in corona chart
முன்னதாக துபாயில் இருந்து தமிழகம் வந்திருந்த 75 வயது முதியவர் ஒருவர் கடந்த 3ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகளின் முடிவில் கொரோனா தொற்று இருந்தது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று விழுப்புரத்தில் ஒருவரும் தேனியில் ஒருவரும் என ஒரே நாளில் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதற்கு முன்பாக மதுரையில் முதியவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios