Asianet News TamilAsianet News Tamil

கோயம்பேட்டில் பதற்றம்... மள மளவென பற்றி எரிந்த தீயில் 2 பஸ்கள் நாசம்..!

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 
 

2 buses destroyed in fire at Koyambedu
Author
Tamil Nadu, First Published Jul 27, 2019, 5:12 PM IST

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிவதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். தீ மளமளவென பரவி 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர்.

இருப்பினும் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன. இந்த தீவிபத்தால் எந்த அசம்பாவிதமும் சம்பமும் நடக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios