உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இளம் வீரர் தங்கம் வென்று அசத்தல்...
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய இளம் வீரர் அகில் ஷியோரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதையடுத்து, முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தங்கம் வென்ற 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய இளம் வீரர் அகில் ஷியோரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதையடுத்து, முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தங்கம் வென்ற 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றுள்ளார். இந்தியாவுக்கு இது 5-வது தங்கமாகும்.
போட்டி நிறைவில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்யும் பட்சத்தில், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.