விம்பிள்டன் டென்னிஸ் அப்டேட்: ரோஜர் ஃபெடரர், மரின் சிலிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் சிறப்பு பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் ஃபெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், குரோஷியாவின் மரின் சிலிச் குரோஷியா மற்றும் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகா மோதினர். இதில், 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார் சிலிச்.
இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வீழ்த்தினார்.
அதேபோன்று, பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி மற்றும் உஸ்பெகிஸ்தானின் வர்வரா லெப்செங்கோ மோதினர்.
இதில், 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார் கரோலின்.
மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச் தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.