Asianet News TamilAsianet News Tamil

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள் இவர்கள்தான்...

Wimbledon tennis tournament these players are advanced to next round.
Wimbledon tennis tournament these players are advanced to next round.
Author
First Published Jul 7, 2018, 12:49 PM IST


விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெவின் ஆண்டர்சன், ரோஜர் பெடரர், நீல்சென் - சிலிஸ்பரி இணை, செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. 

இதில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மற்றும் ஜெர்மனியின் கோல்ஸ்கிரீபர் மோதினர். இதில், 6-3, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கோல்ஸ்கிரீபரை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார் ஆண்டர்சன்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் லினார்ட் ஸ்டிரப்பை வீழ்த்தினார். 

அதேபோன்று, ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - பிரான்சின் ரோஜர் வாசெலின் இணை 4-6, 6-7 (4-7), 1-2 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் பிரிடெரிக் நீல்சென் இங்கிலாந்தின் ஜோ சிலிஸ்பரி இணைக்கு எதிராக பின்தங்கி இருந்த போது, போபண்ணா காயமடைந்தார். இதனால் அவர் பாதியில் விலக நேரிட்டது. இதனால் நீல்சென் - சிலிஸ்பரி இணை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த பிரான்ஸின் மிலாடெனோவிச்சை 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios