காமன்வெல்த்தில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம்...! மீண்டும் வெல்வாரா தங்கம் ..? எதிர்பார்ப்பில் மக்கள்..!
2014 ஆம் ஆண்டு நடந்த காமன் வெல்த் போட்டியில்,தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் குமார்,ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில்,இன்று கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் 2018 போட்டிகளில்,உலகம் முழுவதிலிருந்தும் 4500 கும் மேற்பட்ட வீர்ர் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 227 வீரர் வீராங்கனைகள்பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில்,வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கமும் பங்கேற்று உள்ளதால்,தமிழக மக்கள் சதீஷ் மீது ஒரு தனி ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
11 நாட்கள் நடைப்பெறும் இந்த காமன் வெல்த் போட்டியில்,சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடை பிரிவில், வரும் 7 ஆம் தேதியன்று பங்கேற்கிறார்.
இந்த போட்டியில் சதீஷ் மீண்டும் தங்க பதக்கம் வென்று,இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.
மேலும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர் வீராங்கனைகளும் தங்களது திறமையை நிரூபித்து அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி மெடல்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,ஆஸ்திரேலியாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் சதீஷ்.