இங்கிலாந்து தொடரில் ராயுடுவுக்கு பதில் யார்..? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த அம்பாதி ராயுடு, யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய அம்பாதி ராயுடுவிற்கு இந்திய ஒருநாள் அணியில் ஆட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பளிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் ராயுடு சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால் உடற்தகுதி தேர்வான யோ யோ டெஸ்டில் ராயுடு தேர்வாகததால், அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, இங்கிலாந்தில் நல்ல ரெக்கார்டுகளை வைத்துள்ள ரஹானே சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ராயுடுவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். ரெய்னாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் அணியில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த தொடரில் சிறப்பாக ஆடி, தேர்வாளர்களை ரெய்னா கவர்ந்துவிட்டால், உலக கோப்பை ஒருநாள் அணியிலும் ரெய்னாவிற்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே 2 உலக கோப்பை தொடரில் ஆடியுள்ள ரெய்னா, ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்.
ரெய்னா, பவுலிங்கும் வீசுவார் என்பதால், பகுதிநேர பந்துவீச்சாளராகவும் அவரை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல், ஷர்துல் தாகூர்