உலக கோப்பை கால்பந்து போட்டியின் அடுத்த ஆட்டத்தில் நெய்மர் ஆடுவது சந்தேகம்தான்...
பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அடுத்த ஆட்டத்தில் அவர் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணி மோதிய ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.
தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரேசில் அணியை 1–1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்துடன் சமன் கண்டது.
இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாரை குறிவைத்து சுவிட்சர்லாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை நடத்தினர். இதில், அவர் 10 முறை பௌல் செய்யப்பட்டார். அவர் அடிக்கடி கீழே விழுந்து எழுந்தார். இதனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதனால், நெய்மார் பிரேசில் அணியினருடன் நேற்று சிறிது நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டார். வலது கணுக்காலில் வலி ஏற்பட்டதால் நெய்மார் பயிற்சியில் இருந்து பாதியில் விலகி ஓய்வு எடுத்தார்.
அவர் அந்த அணியின் பிசியோதெரபிஸ்டிடம் சிகிச்சை பெற்றார். இதனால் அடுத்த லீக் ஆட்டத்தில் நெய்மார் ஆடுவாரா? மாட்டாரா? என்பதை விரைவில் அறிவிக்கலாம்.