இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் சிந்து, பிரணாய் போட்டியில் இருந்து வெளியேற்றம்...
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தியாவின் சிந்து, பிரணாய் வெளியேறினர்.
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 14-21, 15-21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவிடம் தோல்வி கண்டு சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதேபோன்று, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் மற்றும் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சீன வீரர் ஷி யுகியுடன் மோதினர்.
இதில், 17-21, 18-21 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஷி யுகியிடம் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார் பிரணாய்.
இவர்கள் இருவரும் இந்த போட்டியில் இருந்து வெளியேறியதால் இந்திய அணி இந்தப் போட்டியில் இருந்து மொத்தமாக வெளியேறியது.