Asianet News TamilAsianet News Tamil

உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை! வரலாற்று சாதனை படைத்த ஆஞ்சல் தாகூர்

சர்வதேச பனிச்சறுக்கு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஆஞ்சல் தாகூர். 
 

indias aanchal thakur participate in world ski championships 2021
Author
Cortina, First Published Feb 21, 2021, 6:58 PM IST

இத்தாலியின் கார்டினாவில் நடந்த உலக பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார் இந்தியாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை ஆஞ்சல் தாகூர். 

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணலியை சேர்ந்தவர் ஆஞ்சல் தாகூர். கடந்த 2018ம் ஆண்டு துருக்கியில் நடந்த Alpine Ejder 3200 கோப்பை தொடரில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் என்று நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்தவர் ஆஞ்சல் தாகூர். 

அப்போதே, அவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியிருந்தார். இந்நிலையில், இத்தாலியில் நடந்த உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக விளையாடினார் ஆஞ்சல் தாகூர். 

"

இதன்மூலம் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஆஞ்சல் தாகூர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios